லாட்டரியில் ரூ.4 கோடி பரிசு…! மனைவிக்கு தெரியாமல் மறைந்த நபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

By Devi Ramu on கார்த்திகை 26, 2025

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர், தான் லாட்டரியில் வென்ற ரூ. 3.8 கோடி (600 மில்லியன் யென்) தொகையைத் தனது சிக்கனமான மனைவிக்குத் தெரியாமல் மறைக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. மாத ஓய்வூதியமாக 2,000 டாலர் மட்டுமே பெற்ற இவருக்கு, இந்த எதிர்பாராத பெரிய தொகை கிடைத்தவுடன், மனைவிக்குத் தெரியாமல் ஆடம்பரமாகச் செலவு செய்து உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.

அதனால், லாட்டரியில் தனக்கு வெறும் 32,000 டாலர் மட்டுமே விழுந்ததாகவும், அதை வைத்து வீட்டைச் சீரமைக்கப் போவதாகவும் மனைவியிடம் பொய் கூறியுள்ளார். ஆனால், வீட்டிற்குத் தெரியாமல் இவ்வாறு பணத்தைச் செலவு செய்வதால் அவருக்குத் குற்ற உணர்ச்சி அதிகரித்துள்ளது. தனது தந்தை கடைசி காலத்தில் விவாகரத்து பெற்று, பணரீதியாகவும் தனிமையிலும் கஷ்டப்பட்ட நிகழ்வு அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

   

இதையடுத்து மனம் திருந்திய அந்த முதியவர், உடனடியாகத் தனது நிதி ஆலோசகரை அழைத்து ஆலோசித்துள்ளார். அதன் பிறகு, தான் லாட்டரியில் வென்ற முழுப் பணத்தையும் தனது பெயரில் காப்பீடு (Insurance) செய்து, அதற்குப் பயனாளிகளாகத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களைச் சேர்த்துள்ளார்.

   

இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்த பணம் எனது சொந்த உழைப்பால் கிடைத்திருந்தால் பெருமைப்பட்டு இருப்பேன். ஆனால் எந்த முயற்சியும் இன்றி இது கிடைத்ததால், எனக்கு மகிழ்ச்சியான நினைவுகளைத் தரவில்லை” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம், குடும்ப உறவுகள்தான் செல்வத்தைவிட முக்கியம் என்பதை உணர்த்துகிறது என்று நெட்டிசனன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.