மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த தீபக் என்பவர் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மகள் ஆரோகி(13) அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறு மீது திடீரென்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் மாணவியை கேலி கிண்டல் செய்து வந்ததும் இது தொடர்பாக மாணவி ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் ஆசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் படிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் ஆசிரியர் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மாணவிக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
