மக்களே உஷார்… SIR பணிகள்… உங்களுக்கும் வரும் போன் கால்… போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு…

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை கையாண்டு தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேரி வருகிறது. அதாவது தற்போது நாடு முழுவதும் SIR பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குறிவைத்து புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி நடந்திருப்பதாக போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். SIR பணிகளை சுட்டிக்காட்டி ஓடிபி நம்பரை கூறுமாறு அணுகும் சைபர் கிரைம் கும்பல், தப்பி தவறி ஓடிபி எண்ணை சொல்லிவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணமோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளோ திருடப்படலாம் என்று கூறியுள்ளனர். இது போன்ற சைபர் கிரைம் மூலம் பாதிக்கப்பட்டால் காவல் நிலையத்தில் அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.