சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். மேலும் தான் படுக்கைக்கு வர முடியாது என மறுத்தபோது, ஹீரோ தனுஷாக இருந்தாலுமா அட்ஜெஸ்ட் செய்ய மாட்டீங்களா? என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விஷயாமானது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மன்யா ஏற்கனவே தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ், தன் பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தருவதாகக் கூறுவது போலியானது என கடந்தாண்டு பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
