வியட்நாமில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஷோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவியில் அந்த வழியாகச் சென்ற பேருந்தின் மீது பாறைகள் விழுந்ததால் அதன் முன் பகுதி நசுங்கியது. கடும் சிரமத்திற்கு பிறகு பேருந்தில் சிக்கி இருந்த 32 பயணிகளை மீட்பு படையினர் போராடி மீட்டனர். இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
