தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% ஆக உயர்த்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் (முன் தேதியிட்டு) வழங்கப்படவுள்ளது.
