தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அதன்படி தற்போது பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு தினம்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஜனவரி 9 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்கின்றன. ஜனவரி பத்தாம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜனவரி 11ஆம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும் IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
