ஆதார் கார்டில் மாற்றம்… இனி வீட்டில் இருந்தே செய்யலாம்… இந்த ஒரு ஆப் போதும்…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் என்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே இந்தியாவின் முக்கிய அரசு ஆவணமாக உள்ள ஆதாரில் ஏதாவது திருத்தம் செய்ய ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். ஆன்லைனில் செய்யலாம் என்றாலும் கை ரேகை, முக அடையாளத்தை பதிவு செய்ய நேரில்தான் செல்ல வேண்டும். இந்த சிக்கலை தவிர்க்க ஆதார் ஆணையம் புதிய ஆப்பை (e – Aadhaar) அறிமுகம் செய்ய உள்ளது. இதில் AI மூலம் கைரேகை, முக அடையாளம் உறுதிப்படுத்தப்படும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த வசதி அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.