கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். சமீபத்தில் ரொனால்டோ ஒரு நேர்காணலில் கூறியது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “உலகக்கோப்பை வெல்வது என் கனவு கிடையாது.
வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலகக்கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.
