தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்.
இந்நிலையில் தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டிள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தமிழக வெற்றிக்கழகம் நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
