கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் அடையாளம் கண்டோம் என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சதீஷ், கார்த்திக் ஆகியோர் சகோதரர்கள், குணா என்பவர் அவர்களுடைய உறவினர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஏதும் ஏற்கனவே கொலை, திருட்டு வழக்குகள் உள்ளது. மது போதையில் திருட்டு வாகனத்தில் சென்று இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.
