கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்துடன் தாம் உடன்படுவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பார்த்திபன், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை. ஒருவேளை அவரை சந்தித்தால் மகிழ்ச்சியாக பேசுவேன். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற கரூருக்கு விஜய் சென்றால் கூட்டம் எதிர்பாராத விதமாக கூடும் என்பதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து பேசியதில் எந்த தவறும் கிடையாது.
விஜய் மட்டுமல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும். சமீபத்தில் சட்டசபையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் கலகலப்பாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதுதான் நாகரிகமான அரசியல். அதுபோல அரசியலில் விஜயை வரவேற்கின்றேன். ஒரு கட்சிக்கு அரசியலில் வாய்ப்பு கொடுத்தால் ஐந்து வருடம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அதன் பிறகே அதிருப்தி இருந்தால் தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும் என அஜித் சொன்னது எனக்கு பிடித்திருந்தது. n கரூர் சம்பவத்தில் விஜய் மட்டும் பொறுப்பல்லை என்று அஜித் சொல்லி இருப்பதன் மூலம் இனிமேல் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறக்கூடாது என்பதை அவர் கூறுகிறார் என்று புரிந்து கொள்கின்றேன். கரூருக்கு விஜய் இரங்கல் தெரிவிக்க சென்றாள் கூட கூட்டம் எதிர்பாராத விதமாக கூடும் என்பதால் பனையூரில் அழைத்து இறந்தவர்களை சந்தித்துள்ளார். அதில் அவருக்கும் மகிழ்ச்சி அந்த குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி. இதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று நடிகர் பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
