இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் உள்ள லோயர் பெர்த் ஒதுக்கீடு தொடர்பான புதிய விதிமுறைகளை பயணிகளுக்கு வெளியிட்டுள்ளது. கீழ்படிக்கைகள் அனைவருக்கும் கிடைப்பது கட்டாயம் இல்லை. தற்போது புதிய விதிமுறைகளின் படி சில நபர்களுக்கு மட்டுமே கீழ்படிக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதாவது மூத்த குடிமக்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
உங்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் பயணிக்க கூடிய அதே பெட்டியில் மூத்த குடிமக்கள் மேல் அல்லது நடு பெர்த் ஆகியவற்றில் இருந்தால் அவர்களை கீழ்ப்படுக்கைக்கு மாற்றுவதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. அதனைப் போலவே இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கும் நேரம் ஆகும். அந்த நேரத்தில் மேல் அல்லது நடு பெர்த்களில் உள்ளவர்கள் கீழ்படிக்கையில் இருப்பவர்களை எழுந்து அமரும்படி எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது. இதே விதிமுறை சைடு லோயர் மற்றும் மேல் பெர்த் படுக்கைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
