“காதலுக்கு வயதில்லை”… ஆம்புலன்ஸில் தாலி கட்டிய மணமகன்… 65 வயதில் மலர்ந்த காதல்… 55 வயது காதலியுடன் ஜோராக நடந்த திருமணம்…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

ஆலப்புழை மாவட்டம் சேத்தலை பகுதியை சேர்ந்த ரமேசன் (45) என்பவர் தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் ஆகி பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இவர் அதே பகுதியில் வசித்த 55 வயது ஓமனா என்ற பெண்ணுடன் பழகத் தொடங்கினார். திருமணம் குறித்து மனம் உடைந்திருந்த ஓமணாவுக்கும் ரமேஷனுக்கும் நட்பு ஆழமான பந்தமாக மாறியது. ஒரு நாள், இனிமேல் வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் இருவருக்கு வந்ததால் உறவினர்களிடம் ஆலோசித்த போது வயது எதுவாக இருந்தாலும் மனம் இளமையாக இருந்தால் போதும் எனக் கூறி அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிராமமே சாட்சியாக இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ரமேசன் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் கடுமையாக காயம் அடைந்தார். காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக உறவினர்கள் திருமணத்தை தள்ளி வைக்க நினைத்த நிலையில் காதலில் உறுதியான ரமேசன் மற்றும் ஓமனா எது வந்தாலும் நிச்சயிக்கப்பட்ட நாளில் தான் தாலி கட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர்.

   

அதன்படி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் ரமேசன் தனது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார். படுக்கையில் அமர்ந்தபடி அவர் தன் காதலிக்கு தாலி கட்டினார். உறவினர்கள் அனைவரும் மலர் தூவி வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு உடனே ஓமனா காயமடைந்த தனது கணவரை மருத்துவமனையில் அன்புடன் கவனிக்க தொடங்கினார். இந்த இனிய தருணம் காதலுக்கு வயது கிடையாது என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.