தான்சானியா நாட்டில் கடந்த மூன்று நாள்களாக நடந்துவரும் கலவரத்தில் இதுவரை 700 பேர் வரை பலியானதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சி முறைகேடாக வெற்றிபெற்றதாக கூறி புதன்கிழமை அன்று போராட்டம் தொடங்கியது. Dar es Salaam, முவான்ஸா உள்ளிட்ட நகரங்களில் தீவிரமான போராட்டம் வன்முறையாக மாறியதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
