இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் தொடர் முடிந்த நிலையில் அடுத்து டி20 போட்டிகள் நடந்து வருகிறது. அங்கு உள்ளூர் போட்டிகளும் நடந்து வருகிறது. அந்தவகையில் மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப்பின் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் பந்து வீசும் இயந்திரத்தை வைத்து நெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த இயந்திரம் வீசிய ஒரு பந்து தலை மற்றும் கழுத்து பகுதியை தாக்கியதில் அவர் சம்பவத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவருடைய மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
