கனமழை எச்சரிக்கை… தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… இதோ லிஸ்ட்… உடனே உங்க ஊர் இருக்கான்னு பாருங்க…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரிக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையில் பள்ளிகளுக்கு மட்டுமின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.