இப்போதெல்லாம் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது. பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படும் சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையயில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவியை அதே கல்லூரியைச் சேர்ந்த ஜூனியர் மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மாலை, குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் கவுடா என்ற மாணவர் மாணவியை கல்லூரியின் கழிப்பறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தோழிகளின் உதவியுடன் தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் கவுடாவை போலீசார் கைது செய்தனர்.
