100 வருடங்களுக்குப் பிறகு தீபாவளி என்று உருவாகும் யோகம்… அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜோதிடத்தில் படி இந்த வருடத்தின் தீபாவளி நாளில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரி கிரக யோகம் உருவாக உள்ளது. சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் தீபாவளி நாளில் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரி கிரக யோகத்தை உருவாக்க உள்ளன. துலாம் ராசியில் உருவாகக்கூடிய இந்த யோகமானது தீபாவளியில் உருவாவது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. இந்நிலையில் சக்தி வாய்ந்த திரி கிரக யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிக பலனை பெறப்போகிறார்கள்.

துலாம்:

   

இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

   

மகரம்:

 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தந்தையுடன் உறவு வலுவடையும்.

தனுசு:

வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வியாபாரங்கள் புதிய ஒப்பந்தங்களை பெறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.