நகை கடன் விதிகளில் புதிய மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நகை கடன் வரம்பு மூன்று அடுக்குகளாக பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம் கடன் வழங்கப்படும். அதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள் கடன் வேண்டுமென்றால் 80 சதவீதம், அதற்கு மேல் வேண்டுமென்றால் 75% அளவுக்கு கடன் கிடைக்கும். மேலும் நகைக்கடலை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
