சென்னையில் வீடுகளில் இருக்கும் சோபாக்கள், படுக்கைகள் உள்ளிட்ட பழைய பொருட்களை அகற்றுவதற்காக மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாகவே வீடுகளில் தேவையற்ற பொருட்கள் நிறைய இருக்கும். அதில் சில பொருட்களை அகற்றுவது மிகவும் சிரமம். இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளில் தேங்கி இருக்கும் பயன்படுத்த முடியாத அல்லது பழைய பொருட்களை அகற்றுவதற்காக மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருட்களான பழைய சோபாக்கள் மற்றும் மர சாமான்கள், மின்னணு கழிவுகள் ஆகிய பொருள்களை மாநகராட்சியின் உதவியுடன் அகற்றுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

அவ்வகையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்ற வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி உதவி எண் 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதும். அவர்களே உங்களுடைய வீட்டிற்கு வந்து பழைய பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள். இந்த சேவை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். இந்த சேவை தேவைப்படும் பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் நம்ம சென்னை சய்தியில் பதிவு செய்தோம் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
