கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் வசித்து வரும் விஜய் என்பவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கீதா தனது கணவர் இல்லாத சமயத்தில் வீட்டுக்கே தனது காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் விஜய்க்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருந்தாலும் கீதா கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ள.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இரவு விஜய் வெளியே சென்ற நிலையில் காதலன் திலீப் கீதாவின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதே சமயம் வெளியே சென்ற விஜய் திடீரென வீட்டுக்கு வந்து பார்த்தபோது காதலனுடன் கீதா உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார். அப்போது கீதா சமையலறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயன்ற போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய் அரிவாளை பிடுங்கி கீதாவை சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா துளி துடித்து உயிரிழந்த நிலையில் திலீப் தப்பி ஓடினார். துரத்திச் சென்ற விஜய் மரத்தடியில் திலீப் காலில் சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய கால் முறிந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று விஜயை பிடித்து அப்புறப்படுத்தினர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
