செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேருடைய பதவியானது சற்றுமுன் பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவியை எடப்பாடியாரால் பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருந்தாலும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை செங்கோட்டையன் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களுடைய பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 ஆதரவாளர்களை பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
