தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் விஜய் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை, இது திட்டமிட்ட சதி என்று விஜய் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
