2025 ஆம் வருடத்திற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் 4922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. சுமார் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தத் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் கூடுதல் பணியிடங்களை சேர்த்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வில் 727 கூடுதல் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 4662 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
