#BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்… கோவையில் லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

கோவை சிங்காநல்லூர் அருகே ஈச்சர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) பலியானார். காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.