கோவை சிங்காநல்லூர் அருகே ஈச்சர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) பலியானார். காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
