ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான மகேந்திரன் என்பவருக்கு பதுமேகலா என்ற மனைவியும் சஞ்சனா ஸ்ரீ என்ற மகளும் உள்ளன. ஆறு வயதாகும் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் வடபழனி மன்னார் முதல் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி அருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கூடவே மனைவியும் தங்கியிருந்து கணவரை கவனித்து வந்த நிலையில் சஞ்சனா ஸ்ரீ ஈரோட்டில் உறவினார் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னை வந்துள்ளார். தாயார் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பொரித்த மீன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கிக் கொடுத்து பிறகு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சஞ்சனாவுக்கு காய்ச்சல் இருந்ததால் மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மறுநாள் காலை மகளை எழுப்பிய போது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் பாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர் கதறி எழுதினர். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
