“ஐயோ அம்மா வலிக்குது”.. ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தையை தாக்கிய நிர்வாகி… காண்போரை கலங்க வைக்கும் வீடியோ ஆதாரம்…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் தனியார் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அங்குள்ள நிர்வாகி மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து டெல்டால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை சித்திரவதை செய்யும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ள நிலையில் தற்போது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.