சென்னை மாவட்டம் வடபழனி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். ஈரோட்டை சேர்ந்த மகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதமாக வடவள்ளியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள். இதனால் மகேந்திரன் ஈரோட்டில் இருந்து குழந்தையை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.
அப்போது மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று முன்தினம் இரவு மருந்து கொடுத்து தூங்க வைத்தார். மறுநாள் காலை மகளை எழுப்பிய போது எந்தவித அசைவும் இல்லை. ஆனால் வாய் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சடைந்த மகேந்திரன் தனது மகளை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் சஞ்சனா ஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆஸ்பிரேஷன் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிறுமி இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
