ரேஷன் கார்டு மூலம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். நிரந்தர வீடு இல்லாமல் தெருவோரத்தில் வசிக்கும் மக்களும் ரேஷன் கார்டு பெற அரசு வழிவகை செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரத்யேக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படும்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்கலாம். அப்படி மனு கொடுப்பவர்கள் இப்போது வசிக்கும் சாலை ஓரத்தில் அருகில் இருக்கும் வீட்டு முகவரியில் அடிப்படையில் ரேஷன் கார்டு கொடுக்கப்படும். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியேறி கூட ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
வாடகை வீட்டு உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தம் செய்து அந்த ஆவணத்தை கொடுத்தும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கலாம். அந்த முகவரியில் இருந்து நீங்கள் காலி செய்ய நேர்ந்தால் புதிய முகவரிக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பித்து முகவரியை மாற்றி கொள்ளலாம். மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து புதிய ரேஷன் கார்டு வாங்கினாலும் கள ஆய்வில் அதனை கண்டுபிடித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
