பிரபல நடிகரான தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இட்லி கடை திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. துரோகம் குறித்த கேள்விக்கு தனுஷ் அது தனக்கு பழகி விட்டதாக கூறியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். பின்னர் வெறுப்புகளை பரப்பும் ஹேட்டர்ஸ் குறித்து கேள்வி கேட்டபோது தனுஷ் கூறியதாவது, அப்படி எல்லாம் யாரும் இல்லை.
எல்லோரும் எல்லோருடைய படங்களும் பார்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட 30 பேர் மட்டுமே 300 ஐடியா வைத்துக்கொண்டு பெயரில் வெறுப்புகளை பரப்புகின்றனர். அது ஏனென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் கூட நம்முடைய படங்களை பார்ப்பார்கள். களத்தில் உண்மையான நிலவரம் வேறு. அந்த காலத்தில் நம்ம பசங்க வேற லெவலில் இருப்பாங்க. அந்த இடத்தில் அன்பு கொடுத்தால் அவர்கள் அதை திருப்பி கொடுப்பார்கள். அன்புவின் எழுச்சி தான் எல்லாமே என தனுஷ் பேசியுள்ளார்.
