BREAKING: விஜய்க்கு அனுமதி இல்லை… தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த புதிய சிக்கல்… பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.  இந்நிலையில் திருச்சி பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ரோடு ஷோ செல்லக்கூடாது, வாகனத்திற்குள் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும். 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என காவல்துறை கண்டிப்பான நிபந்தனை விதித்துள்ளது. இது தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.