டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மக்கள் நலனுக்காகவும் அதிமுக வலுப்பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும் அமித்ஷாவுடன் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என கருத்துக்களை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
