அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் நேற்று கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
