வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் புதிய நடைமுறை… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By Srimathi on புரட்டாதி 6, 2025

Spread the love

தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வணிகப்பிரிவு சார்பில் அனைத்து பொறியாளர்களுக்கும் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை விரைவுப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2 ஐ நுகர்வோரிடமிருந்து பெற வேண்டியது இல்லை என அறிவுறுத்தப்பட்டது. அதே நேரம் விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றை ஒப்புதல் கடிதத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது சமீபமாக பெறப்பட்ட சொத்துவரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.