சமீபமாக வி.கே.சசிகலா வெளியிட்டு அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கிய இயக்கம் இது.
இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட, இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை, கழக மூத்த முன்னோடியும் கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்திருக்கிறார்.
பல இக்கட்டான சூழல்களில் உடன் இருந்து கலகம் ஒன்று பட வேண்டும் என செங்கோட்டையன் போராடினார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். அன்பு சகோதரர் செங்கோட்டையன் போல உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, திமுக என்ன செய்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறாது. அவர்கள் சதித்திட்டத்தை முறியடிக்க கழகத் தொண்டர்கள் ஒன்றிணைைய வேண்டும். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாறு வெள்ளம் போன்றது. இதை யாரும் தடுக்க முடியாது. எனவே திமுக என்ற தீய சக்தியை, நாம் ஒன்று சேர்ந்து தடுப்போம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான அரசை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே! வெற்றி நிச்சயம்! பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க! நன்றி வணக்கம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
