தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூலுக்கு இதுதான் காரணம்… சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்..!!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியுள்ள மதராசி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்துருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான மதராசி படத்தின் டிரைலர் மக்களிடையே மாஸ் காட்டி வருகிறது.

மேலும் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பொழுது, சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் தன் ரசிகர்களிடம் பேசி அசத்தினார். அவர் கூறியதாவது, “படத்தின் கதை மற்றும் கண்டண்ட் நன்றாக இருந்தால், தெலுங்கு தயாரிப்பாளர்கள் செலவு செய்வதற்கு யோசிப்பதே இல்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் அடிக்கடி 1000 கோடி ரூபாய் செலவில் திரைப்படங்கள் உருவாகிறது” என்று கூறினார்.