பாமகவில் இருந்து அன்புமணியே நீக்குவது குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி உடனான மோதலை அடுத்து பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இதனிடையே ராமதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நடவடிக்கை குழு அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கெடு விதித்திருந்தது. கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் எந்த பதிலும் அளிக்காததால் அன்புமணி மீது இன்று நடவடிக்கை பாய்கிறது.
