தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சிக்கல்கள் இருந்தது. பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் நிலவிய நிலையில் இறுதியாக ஓபிஎஸ் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதே சமயம் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என அனைவருமே ஒவ்வொரு பக்கம் விலகி இருக்க மீண்டும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதே பலருடைய எண்ணமாக உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இபிஎஸ் தன்னந்தனி ஆளாக நின்று பாஜகவுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை தனியாக நின்று எதிர்கொள்ள இபிஎஸ் தயாராகி வருகின்றார். சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக ஒருங்கிணைப்புக்கான குரல் வலுத்துக் கொண்டே வருகின்றது. இதில் தீவிரமாக இறங்கி இருக்கும் சசிகலா அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசி உள்ளார். ஆனால் இபிஎஸ் எதற்கும் அசைந்து கொடுக்காததால் தற்போது அவரது மகன் மிதுனிடமே பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
