ஆந்திராவில் அதிர்ச்சி….! இறப்பதற்கு முன்பே கல்லறை இடத்தை முன்பதிவு செய்யும் மக்கள்…. காரணம் என்ன….?

By Devi Ramu on ஆவணி 29, 2025

Spread the love

ஆந்திரா மாநிலத்தில் இறப்பதற்கு முன்பாகவே கல்லறை தோட்டத்தில் இடத்தை முன்பதிவு செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என்பது தெரியாது.

எனவே கணவர் இறந்த பிறகு மனைவியும், மனைவி இறந்த பிறகு கணவரும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்டுவதற்கு இடத்தை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். அங்கு முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

   

சிறு, சிறு சண்டைகளுக்காக இந்த காலத்தில் கணவன் மனைவி பிரிந்து செல்கின்றனர். இந்த சூழலில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.