தமிழ்நாடு முழுவதும் தேர்தலுக்காக அடுத்தடுத்து சுற்றுப்பயணம் செய்ததால் ஜூலை 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பி ஓய்வு எடுத்த நிலையில் தற்போது சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடும் வெயில் மற்றும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ராகுலின் பீகார் பேரணியில் அவர் பங்கேற்றதால் லேசாக உடல் சோர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
