மிகப்பெரிய ஜாக்பாட்…! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. ஆகஸ்ட் 30-இல் ஒரே நாளில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு… சூப்பர் அறிவிப்பு…!!

By Srimathi on ஆவணி 28, 2025

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க, வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு,  தொழில்நெறி வழிகாட்டி மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது.

நாள்: 30/08/2025 (சனிக்கிழமை)

   

நேரம் : காலை 9.00 மணி- மதியம் 3.00 மணிவரை

   

இடம்: லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பெண்ணாடம்

 
  • 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்குபெறுகின்றனர்
  • 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
  • இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்யப்படும்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டுதல்

இதில் கலந்து கொள்ள @ https://www.tnprivatejobs.tn.gov.in @candidate login-User ID, Password தங்களது கைபேசிக்கு வரும் OTP ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மீண்டும் User ID. Password-ஐ பயன்படுத்தி, தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளவும்.

கல்வித் தகுதிகள்

  • 8/10/12-வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /../DIT/B.E/B.Tech

தேவையான ஆவணங்கள் 

  • பாஸ்போர்ட் புகைப்படம்
  • கல்விச் சான்றிதழ்கள்
  • ஆதார் அட்டை
  • சுயக்குறிப்பு (Bio Data)

மேலும்  தகவலுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் : 04142-290039/ 9499055908

திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கடலூர் : 9444094260/9444094261