சமீபத்தில் மதுரையில் TVK இரண்டாவது மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டிற்கு முன்னும் பின்பும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன் தனது நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். பிறகு இடையில் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது மதன் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநாட்டுக்குச் சென்ற ரசிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது விஜய்க்கு புதிய சிக்கலாக அமைந்துள்ளது.
