மதுரையில் நடைபெற்ற த.வெ.க.,வின் 2 ஆவது மாநில மாநாட்டை பற்றி, பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. அதில் பேசிய தலைவர் விஜய், மத்திய & மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறியதுடன், முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று விமர்சித்தார்.
இந்நிலையில் மதுரை மாநகர் பகுதி முழுவதும், தெற்கு மாவட்ட திமுக சார்பில், விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடங்கி வாசிங்க ப்ரோ” என்ற வசனங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “கதறல் சத்தம் கேட்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது” என்ற வாசகத்துடன் த.வெ.கவினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்துவந்த நிலையில், தற்போது திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே மாறி மாறி போஸ்டர் போர் நடைபெற்று வருகிறது.
