தண்டேவாடாவை சேர்ந்தவர் லக்மா குஞ்சம், இவரது முதல் மனைவி குமே குஞ்சம். இவர் இருவரும் சேர்ந்து லக்மாவின் இரண்டாவது மனைவியை கொல்ல முயன்றனர். அந்தப் பெண்ணின் அந்தரங்க பகுதியில் ரசாயனத்தை ஊற்றி, அவரது கழுத்தில் துண்டை போட்டு நெரித்து, கடினமான பொருளால் தாக்கினர். அவர் இறந்து விட்டதாக நினைத்து, இருவரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.
இதைத் தொடர்ந்து லக்மா குஞ்சத்தின் இரண்டாவது மனைவி போலீசில் புகார் தெரிவித்தார். அதில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத சிலர், இந்த செயலை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தம்பதியினரை அழைத்து விசாரித்தனர். அப்பொழுது அவர்களின் வாக்குமூலம் முன்பின் முரணாக இருந்த நிலையில், மேலும் கடுமையாக விசாரிக்கும் பொழுது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
லக்மாவின் இரண்டாவது மனைவி, தனது நிலத்தை வேறு ஒருவருக்கு விவசாயத்திற்காக கொடுத்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை அவள் அருகில் வர அனுமதிக்கவில்லை. இந்த பகை காரணமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஒப்புக்கொண்டனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி, போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
