குஷியோ குஷி… இனி அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கும் ஒரே கட்டணம்… சூப்பர் அறிவிப்பு…!

By Divyamayakannan on ஆவணி 17, 2025

Spread the love

பாட்னா பீஹாரில் அனைத்து போட்டி தேர்தலுக்கும் 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். முதன்மை தேர்வுகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் பாஜ, கூட்டணி ஆட்சி நிதீஷ் குமார் தலைமையில் நடக்கிறது. உன் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் பீஹாரில் நடக்க உள்ளது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நிதிஷ்குமார்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் ஓய்வு ஊதியத்தை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகள், பொதுப் பணியாளர் தேர்வாணையம், தொழில்நுட்பப் பணி ஆணையம், காவல்துறை துணைப்பணி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்துகின்றன.

   

ஒவ்வொரு பணிகளுக்கு தகுந்தார் போல தேர்வு கட்டணத்தை நியமித்து வருகிறார்கள். முதல் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதித் தேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அரசு வேலைகளுக்காக தேர்வு எழுதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இத்திட்டம் உதவும் என அவர் கூறியுள்ளார்.