டெல்லி-என்.சி.ஆர்-லிருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் வீதிகளில் இறங்கி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகராட்சி மன்ற தலைவராக இருந்தபோது 2500 தெரு நாய்களைக் கொன்று அவைகளை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாக பயன்படுத்தியதாக JDS கட்சி எம்.எல்.சி போஜகவுடா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெருநாய்களை அகற்றுவது யாராவது எதிர்த்தால் அவர்களின் வீடுகளுக்குள் பத்து தெரு நாய்களை விட வேண்டும் என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.
