சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக தற்காலிக பணியில் பணியாற்றிய இவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தூய்மை பணிகளை தனியார் தனியாருக்கு ஒதுக்கியதால் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றன . ஆகவே தூய்மை பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற வேண்டும் என்ற என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
போராட்டத்தின் காரணத்தினால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளது, அதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதார பிரச்சனைகள் வருவதாகவும் அங்கு இருக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் உள்ள பணியாளர்களிடம் மாநகராட்சி சார்பில் சொல்லியும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தூய்மை பணியாளர்களுக்காக தாவிக்க தலைவர் விஜயும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் திரை உலக பிரபலங்களும், பல்வேறுஅரசியல் கட்சிகளும் தூய்மை பணியாளர்களுக்காக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பெற்றுள்ளது. இது உங்களை அவமதிப்பதற்காக அல்ல , அனுமதி இல்லாத இடத்தில் போராட உரிமை இல்லை உங்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் காவல் துறையினர் கட்டுப்பாடுடன் நீங்கள் போராட்டத்தை தொடரலாம் என்று கூறியுள்ளார் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது உயர்நீதிமன்றம். அதனால் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் செல்லும்படி சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுவித்துள்ளது. உடனடியாக இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்கள்.
