ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. ஹைதராபாத் ,விஜயவாடா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனை குழாய் மற்றும் வாடகை தாய் மூலமாக குழந்தைகளை பெற்று தருவதாக நம்ப வைத்தார். அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி வந்துள்ளார் .தம்பதியின் விந்தணு மற்றும் கருமுட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதி அளித்தார். இதற்காக தம்பதிகளிடம் 30 முதல் 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். மேலும் வாடகை தாய் பராமரிப்புக்கும் சேர்த்து கூடுதல் பணம் வசூலித்து வந்தார்.
ஆனால் இந்த கருத்தரிப்பு மையத்தில், கடத்தப்படும் குழந்தைகளை வாடகைத்தாய் முறையில் பெற்றதாக கூறி தம்பதியினர் புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் நம்ரதா உட்பட எட்டு பேரை கைது செய்தார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலோடு சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடை ந்துள்ளார்கள். இதனை அறிந்த காவல் துறையினர் நம்ரதா மற்றும் அவருடைய மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கி கணக்குகளை மூடியுள்ளார்கள்.
