ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் பகுதியில் வெள்ளிக்கிழமை(நேற்று ) தொடங்கிய தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுடன் நடந்த சந்தையில் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இன்னும் ஓரிரு பயங்கரவாதிகள் அந்த பகுதியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் “ஆபரேஷன் மகாதேவ்” நடவடிக்கைகள் தொடர்வதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
